kai
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கோப்பாய், கொக்குவில் பகுதிகளில் வாள்வெட்டு! – ஒருவர் கைது

Share

வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் மற்றும் கொக்குவில் உள்ள வீடுகளில் புகுந்தே குறித்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைதானவர் மானிப்பாய் புதுமடத்தைச் சேர்ந்த கொலின் (வயது-26) என்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபரிடமிருந்து கூரிய ஆயுதம் ஒன்றும் கைப்பட்டப்பட்டுள்ளது. கைதான நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மானிப்பாய் மற்றும் கொக்குவில் பகுதிகளில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் கடந்த நவம்பர் 23ஆம் திகதி புகுந்த கும்பல் ஒன்று வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட நிலையில் அங்கிருந்து தப்பித்தது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கைதான நபருக்கு எதிராக ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...