IMG 20211213 120410 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்கானையில் தொடரும் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்…!

Share

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானையில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்றிரவு பத்து மணியளவில் (12) புகுந்த வாள்வெட்டுக்குழு பொருட்களுக்கு சேதம் விளைவித்து தப்பிச்சென்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட குழு வீட்டின் கதவுகள், முச்சக்கர வண்டி, மீன் தொட்டி, தண்ணீர் குழாய், கதிரைகள் மற்றும் வேலி தகரங்கள் என்பவற்றினை வாளினால் வெட்டி சேதப்படுத்தியுள்ளது.

குறித்த கும்பல் முச்சக்கர வண்டிக்கு தீ மூட்டியுள்ள போதும் முச்சக்கர வண்டியினை மூடியிருந்த பொலுத்தீன் எரிந்துகொண்டிருந்தவேளை வீட்டிலிருந்தவர்கள் அந்த பொலுத்தீனை கீழே இழுத்து விழுத்தினர்.

இதனால் முச்சக்கர வண்டி பாரிய பாதிப்பிற்கு உள்ளாகவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
06 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுகாதார சேவைகளைப் பாதிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு: தீர்வு காணுமாறு ஜனாதிபதியிடம் GMOA வலியுறுத்தல்

தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டு முறையினால் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்துச் சிரமங்கள் நாட்டின்...

05 16
செய்திகள்இலங்கை

சர்வதேச கடற்பரப்பில் ஈரானிய போர்க்கப்பல் தாக்குதல்: இலங்கை நீதிமன்றத்தின் மனிதாபிமான உத்தரவு

சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்கப் படைகளால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐரிஸ் தேனா’ (IRIS Dena) விபத்தில்...

04 15
செய்திகள்இலங்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: மூளையாகச் செயல்பட்டவரின் பெயரை வெளியிடப் போவதாக உதய கம்மன்பில அறிவிப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த உண்மையான சூத்திரதாரியின் (Mastermind) அடையாளத்தை எதிர்வரும்...

03 16
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மீதான வழக்கு: ஆகஸ்ட் 17-க்கு ஒத்திவைப்பு!

2022 ஆம் ஆண்டில் கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அண்மையில் சட்டவிரோதமாக வீதி நாடகமொன்றை நடத்தி பொதுமக்களுக்கு...