2023-ஆம் ஆண்டில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமீரக பிரதமர் சேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் கிளாஸ்கோவில் கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி தொடங்கி இன்றுடன் நிறைவுபெற்ற இந்த மாநாடு அடுத்த ஆண்டு எகிப்தில் இடம்பெறவுள்ளது.
கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த டீசல் மற்றும் பெற்றோல் பயன்பாட்டின் அளவைக் குறைத்து சர்வதேச நாடுகள் மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டும் என்று ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
OPEC எனப்படும் பெற்றோலிய ஏற்றுமதிக் கூட்டமைப்பு நாடுகளின் ஒரு அங்கமாக உள்ள ஐக்கிய அரபு அமீரகம் 2023-ல் துபாயில் இந்த உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது.
#world