யாழ். கொக்குவில் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு!
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இன்றையதினம் யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சமீப காலமாக யாழ்ப்பாணத்தில்இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் அந்த
இடங்களில் பதுங்கியிருகின்றனர் என யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இன்று அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணிவரை பொலிஸார் மற்றும் நூற்றுக்கும் அதிகமான இராணுவத்தினர் கொக்குவிலின் ஒரு பகுதி சுற்றிவளைக்கப்பட்டது. சந்தேகத்துக்கிடமான வீடுகளில் தேடுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டதென சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இச் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
Leave a comment