38af0f1e c38f 11eb b0c2 606eecf395cb image hires 124738
செய்திகள்உலகம்

3 குழந்தை பெறும் தம்பதிகளுக்கு இவ்வளவு சலுகையா!!!

Share

சீனாவில் பிறப்பு வீதத்தை அதிகரிக்கும் நோக்குடன் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு விசேட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகைளை மாகாண அரசுகள் அறிவிக்க தொடங்கியுள்ளன.

சீனாவின் மொத்த மக்கள் தொகை 141.2 கோடியாகும். கடந்த 1976 முதல் 2016 வரை மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனாவில் தம்பதியருக்கு ஒரு குழந்தை திட்டம் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இப்புதிய திட்டத்தை அமல்படுத்தும் வகையில் மக்கள் தொகை மற்றும் குடும்ப கட்டுப்பாடு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட சலுகைகைளை மாகாண அரசுகள் அறிவிக்க தொடங்கியுள்ளன.

சீனாவில் 20-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் மகப்பேறு விடுப்பு, திருமண விடுமுறையை நீடித்தல் மற்றும் தாய்மார்களை கவனித்து கொள்ள ஆண்களுக்கு விடுமுறை அதிகரிப்பது போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனால் சீன மக்களுக்கு மூன்று குழந்தைகளை வளர்ப்பதில் எந்தவித பிரச்சனையும் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு மக்களுக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக இருக்கும் என நம்புவதாக சீன அரசு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

#WorldNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...