படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயிலா..: மோடிக்கு, நாமல் பகவத்கீதை வழங்கியது எதற்காக..?

6ad361ed 6287a8e0 narendra modi

இந்தியாவுக்கு சென்ற விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்திருந்தார்.

புத்த தர்மம் இந்தியாவிலிருந்து கிடைத்த விசேட பரிசு என நாமல் ராஜபக்ஸ தமது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அடங்கிய பகவத் கீதையின் முதற்பிரதியை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இந்தத் தருணத்தில் இந்தியப் பிரதமரிடம் கையளித்தார்.

இந்த நிலையில் இதுதொடர்பாக படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோயிலா..? என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம், கேள்வியெழுப்பியுள்ளார்.

#SrilankaNews

Exit mobile version