ஆசிரியர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு மாணவர்கள் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போத்தல – காசிதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த பத்தேகம புனித அந்தோனியார் கல்லூரியில் கடமையாற்றும் 45 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
ஆசிரியரின் வீட்டிற்கு முச்சக்கர வண்டியில் சென்ற 16 வயதுடைய சிறுமியும், சிறுவனொருவனும் நேற்று (21) இரவு ஆசிரியரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக போத்தல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் காயங்களுடன் பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த ஆசிரியர், மேற்படி சிறுமியின் தாயாருடன் தகாத உறவினைப் பேணிவந்தமையால், ஆசிரியரின் வீட்டுக்குச் சென்று வினவியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் குறித்த சிறுமி ஆசிரியரைத் தாக்கியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் போத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SrilankaNews
Leave a comment