Students
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மலையகத்திலும் மாணவர்களின் வருகை வீழ்ச்சி!

Share

200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் இன்று (21.10.2021) முதல் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்தாலும், பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை இடம்பெறவில்லை. மாணவர்களின் வருகையும் குறைவாகவே காணப்பட்டது.

மலையக பகுதிகளில் சுமார் 20 வீதமான பாடசாலைகளே திறக்கப்பட்டிருந்தன. மாணவர்களின் வருகையில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது.

ஒக்டோபர் 25 ஆம் திகதியில் இருந்தே அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளித்திருப்பார்கள் என அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்தது. 21 மற்றும் 22 ஆம் திகதிகளிலும் பணி புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி அதிபர், ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் இன்று பாடசாலைக்கு வரவில்லை. வருகை தந்த சில மாணவர்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மன்னார் மாவட்டத்திலும், மாணவர் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்ப நிலை காணப்படுவதால் இன்றைய தினம் வியாழக்கிழமை (21) பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் வருகை மிகவும் குறைவாக காணப்படுகின்றது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...