20211130 094126 scaled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் யாழில் போராட்டம்!

Share

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் “வலிந்து காணாமல்போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், காணாமல்போனோருக்கான இழப்பீடு வேண்டாம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா” போன்ற பல கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பொலிஸாரும் புலனாய்வுப்பிரிவினரும் போராட்டம் நடைபெற்ற பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

வலிந்து காணாமல் போனோரின் உறவுகளால் ஒவ்வொரு மாதமும் 30ஆம் திகதி போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

20211130 095702 20211130 095646 20211130 095220

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...