jkhk 1
செய்திகள்இலங்கை

நீதிகோரி உறவுகள் வீடுகளில் போராட்டம்

Share

இறுதிப் போரில் சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவர்களின் உறவுகள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு அடையாள கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் கடைப்பிடிக்கும் முகமாக இது மேற்கொள்ளப்படுகிறது.

home art ghjhgj 7898989 6765767

கொவிட் 19 பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தத்தமது வீடுகளிலிருந்தவாறே சர்வதேசத்திடம் நீதி கோரி இந்த கவனவீர்ப்பு போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் பொது இடத்தில் ஒன்றுகூடி மிகப்பெரும் அளவில் கவனவீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளும் உறவுகள் தற்போதைய சூழ்நிலையில் தமது வீடுகளில் நீதி கோரிய வாசகங்களை தாங்கி மெழுகுதிரி ஏந்தி பேராட்டத்தை முன்னெடுத்தள்ளனர்.

‘‘நாங்கள் இந்த அரசை நம்பவில்லை. சர்வதேச விசாரணையே வேண்டும்’’, ‘‘இராணுவத்தை நம்பி கையளித்தவர்கள் எங்கே? எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டார்கள்? ’’ ‘‘ நீதி விசாரணையே வேண்டும்’’ போன்ற வாசகங்களை தாங்கி இந்தத் தினத்தை அடையாளப்படுத்தி கவனவீர்ப்பை மேற்கொண்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...