jkhk 1
செய்திகள்இலங்கை

நீதிகோரி உறவுகள் வீடுகளில் போராட்டம்

Share

இறுதிப் போரில் சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவர்களின் உறவுகள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு அடையாள கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் கடைப்பிடிக்கும் முகமாக இது மேற்கொள்ளப்படுகிறது.

home art ghjhgj 7898989 6765767

கொவிட் 19 பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தத்தமது வீடுகளிலிருந்தவாறே சர்வதேசத்திடம் நீதி கோரி இந்த கவனவீர்ப்பு போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் பொது இடத்தில் ஒன்றுகூடி மிகப்பெரும் அளவில் கவனவீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளும் உறவுகள் தற்போதைய சூழ்நிலையில் தமது வீடுகளில் நீதி கோரிய வாசகங்களை தாங்கி மெழுகுதிரி ஏந்தி பேராட்டத்தை முன்னெடுத்தள்ளனர்.

‘‘நாங்கள் இந்த அரசை நம்பவில்லை. சர்வதேச விசாரணையே வேண்டும்’’, ‘‘இராணுவத்தை நம்பி கையளித்தவர்கள் எங்கே? எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டார்கள்? ’’ ‘‘ நீதி விசாரணையே வேண்டும்’’ போன்ற வாசகங்களை தாங்கி இந்தத் தினத்தை அடையாளப்படுத்தி கவனவீர்ப்பை மேற்கொண்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...