speaker mahinda yapa abeywardena 700x375 1
செய்திகள்அரசியல்இலங்கை

அதியுயர் சபையில் பெண்களை அவமதித்தால் கடும் நடவடிக்கை – எச்சரிக்கிறார் சபாநாயகர்!

Share

அதியுயர் சபையில் பெண்களை அவமதிக்கும் வகையில் செயற்பட்டால் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுங்கட்சி எம்.பி திஸ்ஸ குட்டியாராச்சியை சபாநாயகர் கடுமையாக எச்சரித்தார்.

பாராளுமன்றத்தின் இன்றைய (23) அமர்வை ஆரம்பித்து வைத்தபோதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இவ்வாறு  தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, பாராளுமன்றத்தில் இல்லாத மற்றொரு பெண் ஆகியோரை, ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி அதியுயர்சபையில் அவமதிக்கும் வகையில் பேசியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சபாநாயகர் என்ற வகையில் நான் ஆழமாக ஆராய்ந்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

திஸ்ஸகுட்டியாராச்சி எம்.பியின் உரை தொடர்பில் நான் கவலையடைகிறேன். அதியுயர் சபையில் பெண்களை அவமதிக்கும் வகையில் செயற்பட வேண்டாம்.

பெண்களை அவமதிக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்திலும் தொடர்ந்து இடம்பெற்றால், நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் அந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பேன் எனவும் எச்சரித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2Fka10y8tLGVxpVydY2Opn
செய்திகள்உலகம்

பிரித்தானிய நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டம்: பங்குச் சந்தை முதலீட்டை ஊக்குவிக்கச் சேமிப்புக் கணக்கு வரம்பு குறைய வாய்ப்பு!

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) நாளைய தினம் (நவம்பர் 26) தனது வருடாந்தர...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...