தனிப்பட்ட விமர்சனங்களை நிறுத்துங்கள் – NPP உறுப்பினர்களுக்கு ஜீவன் தொண்டமான் நேரடி எச்சரிக்கை!

Jeevan

தேசிய மக்கள் சக்தியின் (NPP) சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், தன்னைத் தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பதைக் கைவிட்டு, ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற மரபுகள் மற்றும் கண்ணியம் குறித்து அந்தத் தரப்பின் மேல்மட்ட உறுப்பினர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

“எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நாடாளுமன்றில் பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். என்னை விமர்சிப்பதால் மலையக மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை,” என அவர் காட்டமாகத் தெரிவித்தார்.

மலையகத்தில் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எவ்விடத்திலும் தேசிய மக்கள் சக்தியைக் கைவிடவில்லை என்பதை அவர் நினைவுபடுத்தினார்.

தேசிய மக்கள் சக்தி மீது நாட்டின் பெரும்பான்மை மக்கள் நம்பிக்கை வைத்துள்ள காரணத்தினாலேயே, தாம் அந்தத் தரப்பிற்கு ஆதரவு வழங்கியதாக அவர் விளக்கமளித்தார்.

கூட்டணி மற்றும் ஒத்துழைப்பு அரசியல் சூழலில், ஒருவரையொருவர் சேறு பூசுவதை விடுத்து, மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்துமாறு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

 

 

Exit mobile version