Jeevan
செய்திகள்அரசியல்இலங்கை

தனிப்பட்ட விமர்சனங்களை நிறுத்துங்கள் – NPP உறுப்பினர்களுக்கு ஜீவன் தொண்டமான் நேரடி எச்சரிக்கை!

Share

தேசிய மக்கள் சக்தியின் (NPP) சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், தன்னைத் தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பதைக் கைவிட்டு, ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற மரபுகள் மற்றும் கண்ணியம் குறித்து அந்தத் தரப்பின் மேல்மட்ட உறுப்பினர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

“எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நாடாளுமன்றில் பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். என்னை விமர்சிப்பதால் மலையக மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை,” என அவர் காட்டமாகத் தெரிவித்தார்.

மலையகத்தில் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எவ்விடத்திலும் தேசிய மக்கள் சக்தியைக் கைவிடவில்லை என்பதை அவர் நினைவுபடுத்தினார்.

தேசிய மக்கள் சக்தி மீது நாட்டின் பெரும்பான்மை மக்கள் நம்பிக்கை வைத்துள்ள காரணத்தினாலேயே, தாம் அந்தத் தரப்பிற்கு ஆதரவு வழங்கியதாக அவர் விளக்கமளித்தார்.

கூட்டணி மற்றும் ஒத்துழைப்பு அரசியல் சூழலில், ஒருவரையொருவர் சேறு பூசுவதை விடுத்து, மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்துமாறு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

 

 

Share
தொடர்புடையது
11 3
செய்திகள்இந்தியா

விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு: நடிகர் விஜய்யின் 27 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யின் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம், தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் உள்ள...

10 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பகுதி சந்திர கிரகணத்தைக் காணும் அரிய வாய்ப்பு!

இலங்கையர்கள் மார்ச் 3, 2026 செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணத்தைக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று ஆர்தர்...

09 3
செய்திகள்உலகம்

வட்ஸ்அப் வெப் சேவையில் திடீர் முடக்கம்: ஐபோன் பயனர்கள் கடும் அவதி!

உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப் வெப் (WhatsApp Web) சேவையைப் பயன்படுத்துவதில் இன்று திடீர்...

08 3
செய்திகள்இலங்கை

குற்றவாளிகளைத் தேடி: சிவப்பு அறிவித்தல் இன்றி 14 பேர் நாட கடத்தல் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

சர்வதேச பொலிஸ் (Interpol) சிவப்பு அறிவித்தல்கள் (Red Notice) இன்றி, இதுவரை 14 சந்தேக நபர்களை...