வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார், கடந்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் மலையக பல்கலைக்கழகம் எங்கே? இன்னும் காணி தேடப்படுகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்‚ நாட்டின் எதிர்காலம் அபாயநிலையை நோக்கி நகர்வதாகவும்‚ எவ்விதமான சலுகைகளும் இல்லாத வரவு செலவு திட்டத்தினை அரசாங்கம் தயாரித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களால் மிகக் குறுகிய காலத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்ட அரசாங்கம் என சுட்டிகாட்டிய அவர்‚ அரச ஊழியர்கள் சுமையென சித்தரிக்கபபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என் தெரிவித்தார்.
தொடர்ந்து‚ பெருந்தோட்ட மக்கள் வரவு செலுவு திட்டத்தில் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதையும் வலியுறுத்தினார்.
#SrilankaNews
Leave a comment