9f9401ee34854fe8b9424a9905db62531679431836355184 original
செய்திகள்இலங்கை

திருச்சி சிறப்பு முகாம்: விடுதலை செய் அல்லது நாடு கடத்து – இலங்கை இளைஞரின் தொடர் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!

Share

இந்தியாவின் திருச்சி சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் (Special Camp) தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் ஒருவர், தன்னை விடுவிக்கக் கோரித் தொடர்ந்து உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனை இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

உரிய கடவுச்சீட்டு இன்றி தமிழகத்தில் தங்கியிருந்த குற்றச்சாட்டில், கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் திகதி குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டார். முகாமிலிருந்து தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து அவர் கடந்த சில நாட்களாக உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.

திருச்சி சிறை அதிகாரிகள் மற்றும் சிறப்பு முகாம் அதிகாரிகள் அந்த இளைஞருடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எனினும், அவர் எந்தவித நிபந்தனைகளுக்கும் இணங்க மறுத்து தனது போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

முன்னதாக இவருடன் மேலும் நான்கு பேர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை நாமக்கல் மறுவாழ்வு மையத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

குறித்த இளைஞனுக்குத் தனது தாயகம் (இலங்கை) திரும்ப விருப்பம் இல்லை என்பதால், அவரை நாமக்கல் மையத்திற்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தீர்மானத்தையும் நிராகரித்துள்ள அவர், தன்னை முழுமையாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னைக்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகரகம் மற்றும் இந்தியத் தரப்புடன் இலங்கை வெளிவிவகார அமைச்சு தொடர்ச்சியான தொடர்பில் இருப்பதாகவும், இளைஞரின் உடல்நிலை மற்றும் சட்ட ரீதியான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...