MediaFile 2 1
செய்திகள்இந்தியாஇலங்கை

காரைநகரில் 11 இந்திய மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அதிரடி!

Share

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் நேற்றைய தினம் (ஜனவரி 02) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த போது இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது இவர்கள் சிக்கியுள்ளனர்.

மீனவர்களுடன் சேர்த்து IND/PY/PK/MM/979 என்ற இலக்கத்தைக் கொண்ட ஒரு விசைப்படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கை: கைது செய்யப்பட்ட 11 மீனவர்களும், அவர்களின் படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரம் தொடர்ந்து வரும் நிலையில், தற்போதைய தரவுகளின்படி இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 62 மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த பல ஆண்டுகளாகப் பறிமுதல் செய்யப்பட்ட 253 மீன்பிடிப் படகுகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இலங்கை வசம் உள்ளன.

இந்தத் தொடர் கைதுகள் மற்றும் படகுகள் முடக்கம் காரணமாகத் தமிழக மீனவக் கிராமங்களில் கவலையும், மத்திய – மாநில அரசுகள் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்து வருகின்றன.

 

 

Share
தொடர்புடையது
anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...

Featured mm
இலங்கை

பெக்கோ சமன் தாயார் படுகொலை – பின்னணியில் பழிவாங்கும் படலம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின்...