goat scaled
செய்திகள்இலங்கை

ஆடு துஷ்பிரயோகம் – பிரான்ஸில் இலங்கையர் கைது!

Share

பிரான்சில் விலங்குகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நபர் ஆடு ஒன்றினை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகம்  செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 27ம் திகதி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்த விசாரணைகளுக்கு டிசம்பர் 23ம் திகதி நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிரான்ஸ் – டூரிஸ் on Île Honoré de Balzac தீவில் வளர்ப்பு ஆடுகளை குறித்த நபர்  துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரே ஆட்டினை குறித்த நபர் மூன்று முறை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறித்த நபர் 2018ம் ஆண்டு முதல் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அந்த ஆண்டின் முற்பகுதியில் இருந்து துஷ்பிரயோகம் செய்துள்ளமை உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஜனவரி 12 முதல் 13ம் திகதி வரையிலும், மார்ச் 21 முதல் 22ம் திகதி வரையிலும், ஜூன் 29 முதல் 30ம் திகதி வரையில் இரவு நேரங்களில் சந்தேகநபர் இந்த குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள குறித்த நபர், தியானம் அல்லது யோகசம் செய்வதற்கு குறித்த இடத்திற்கு வருவதை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், மது போதையில் இருந்தமையினால் ஆட்டினை துஷ்பிரயோகம் செய்தமை நினைவில் இல்லை என தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் 23ம் திகதி நீதிமன்றில் இடம்பெறும் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
New Project 185 1
செய்திகள்அரசியல்இலங்கை

லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிராகப் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்!

ரில்வின் சில்வா கடந்த 21ஆம் திகதி லண்டனுக்குச் சென்றார். அவர் நேற்றுப் பிற்பகலில், லண்டன் –...

4OIQC0T image crop 26859
செய்திகள்இலங்கை

இளம் பெண்கள்: போதிய ஆதரவின்றி பாலியல் தொழிலுக்குத் திரும்புவதாக அறக்கட்டளை கவலை!

18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள்,...

1763786264 landslide 6
செய்திகள்இலங்கை

கடுகண்ணாவ கோர விபத்து: அபாயகரமான பகுதியாக அறிவிப்பு – 6 பேர் பலி!

அண்மையில் கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயகரமானதென அடையாளம்...

AP23249341908962 1763956497
உலகம்செய்திகள்

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களுக்குத் தடை: சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கம்!

அடுத்த ஆண்டு முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய மலேசியா தீர்மானித்துள்ளதாக...