goat scaled
செய்திகள்இலங்கை

ஆடு துஷ்பிரயோகம் – பிரான்ஸில் இலங்கையர் கைது!

Share

பிரான்சில் விலங்குகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நபர் ஆடு ஒன்றினை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகம்  செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 27ம் திகதி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்த விசாரணைகளுக்கு டிசம்பர் 23ம் திகதி நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிரான்ஸ் – டூரிஸ் on Île Honoré de Balzac தீவில் வளர்ப்பு ஆடுகளை குறித்த நபர்  துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரே ஆட்டினை குறித்த நபர் மூன்று முறை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறித்த நபர் 2018ம் ஆண்டு முதல் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அந்த ஆண்டின் முற்பகுதியில் இருந்து துஷ்பிரயோகம் செய்துள்ளமை உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஜனவரி 12 முதல் 13ம் திகதி வரையிலும், மார்ச் 21 முதல் 22ம் திகதி வரையிலும், ஜூன் 29 முதல் 30ம் திகதி வரையில் இரவு நேரங்களில் சந்தேகநபர் இந்த குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள குறித்த நபர், தியானம் அல்லது யோகசம் செய்வதற்கு குறித்த இடத்திற்கு வருவதை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், மது போதையில் இருந்தமையினால் ஆட்டினை துஷ்பிரயோகம் செய்தமை நினைவில் இல்லை என தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் 23ம் திகதி நீதிமன்றில் இடம்பெறும் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில்...