அடுத்த சில மாதங்களில் கோவிட் தொற்று ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை மாறும் என்று சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நான்கு முக்கிய நாடுகளில் இலங்கை முன்னணி நாடாக மாறியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எல்லா நேரமும் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதை பிரதான பொறுப்பாகக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment