676e77e8fd6e686c38a65600 UN Convention Against Cybercrime scaled 1
செய்திகள்இலங்கை

சைபர் குற்றங்களுக்கு எதிரான ஐ.நா. மாநாட்டில் இலங்கை கையெழுத்து: பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை நிறுவ நடவடிக்கை!

Share

சைபர் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் (UN Convention Against Cybercrime) இலங்கை உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளது.

இந்த மாநாடு, சைபர் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை நிறுவுவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கை சார்பான ஆவணத்தில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளர் வருண ஸ்ரீ தனபால கையெழுத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கை மூன்று மாதங்களுக்குள் அமைச்சுகளுக்கு இடையேயான பொறிமுறை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.

இதனிடையே, இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு , சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கான தேசிய மையப் புள்ளியாக நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம், சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை சர்வதேச அரங்கில் தனது உறுதிப்பாட்டை நிலைநாட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...