676e77e8fd6e686c38a65600 UN Convention Against Cybercrime scaled 1
செய்திகள்இலங்கை

சைபர் குற்றங்களுக்கு எதிரான ஐ.நா. மாநாட்டில் இலங்கை கையெழுத்து: பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை நிறுவ நடவடிக்கை!

Share

சைபர் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் (UN Convention Against Cybercrime) இலங்கை உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளது.

இந்த மாநாடு, சைபர் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை நிறுவுவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கை சார்பான ஆவணத்தில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளர் வருண ஸ்ரீ தனபால கையெழுத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கை மூன்று மாதங்களுக்குள் அமைச்சுகளுக்கு இடையேயான பொறிமுறை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.

இதனிடையே, இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு , சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கான தேசிய மையப் புள்ளியாக நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம், சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை சர்வதேச அரங்கில் தனது உறுதிப்பாட்டை நிலைநாட்டியுள்ளது.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...