பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் இருப்பானது நிச்சயமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது. இலங்கை ஆசியாவில் உள்ள மிகவும் வறிய நாடு என்ற நிலைமைக்கு மாறுவதை தடுத்தும் நிறுத்த முடியாது.
தற்போதைய அரசாங்கத்திடம் வேலைத்திட்டங்கள் இல்லை, நிலைப்பாடுகள் இல்லை, கொள்கைகளும் இல்லை. நிர்வாகம் செய்வதற்கான முறைகளும் இல்லை என்பதுடன் அரசாங்கம் எங்கு போகிறது என்பது எமக்கும் புரியவில்லை, மக்களும் புரியவில்லை எனவும் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
#SrilankaNews
Leave a comment