China srilanka
செய்திகள்அரசியல்இலங்கை

சீனாவின் இராஜதந்திரப் பிடிக்குள் இலங்கை!-

Share

சீனாவின் இராஜதந்திர அழுத்தத்திற்குள் இலங்கை சிக்குமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தரமற்ற இயற்கை உரங்களின் இருப்புக்களை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சேதன பசளை விவகாரம் தொடர்பான கருத்துக்களைப் பெறுவதற்காக நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையில் டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் பருப்பு அல்லது கொத்தமல்லி இருக்காது.

சேதன பசளை விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தில் உள்ளவர்களின் கருத்தை இவ்வாறான வாக்கெடுப்பின் மூலம் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.

எந்தவொரு நாடும் 100 சதவீத சேதன பசளைப் பாவனைக்கு மாறவில்லை. அது சாத்தியமற்றதே. சிலோன் தேயிலையின் பெயர் பாதிக்கப்படும் பட்சத்தில் நாட்டின் ஏற்றுமதி வருமானம் பாரியளவில் பாதிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...