8e2ca174 prayut chan o cha
செய்திகள்உலகம்

தாய்லாந்து பிரதமருக்கு இலங்கை அழைப்பு!

Share

தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் சமிந்தா ஐ கொலொன்னே தாய்லாந்து நாட்டு பிரதமர் பிரயூத் சான்சாவை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தாய்லாந்தின் தலைநகர் பெங்கொங்கில் தாய்லாந்து பிரதமரை சந்தித்தபோதே இந்த அழைப்பை அவர் விடுத்துள்ளார்.

இதன்போது தாய்லாந்து பிரதமர் கொரோனா ஒழித்தல் , மீன்பிடி, விவசாயம் மற்றும் செயற்கை மழையை பொழியச் செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் தூதுவர் தாய்லாந்தில் சிங்கள மொழியை கற்பிப்பதற்கான மத்திய நிலையத்தை திறப்பது தொடர்பாக முன்வைத்த யோசனைக்கு பிரதமர் தமது இணக்கத்தை தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து 5 ஆவது பிம்ஸ்டெக் மாநாட்டுக்கு தலைமைத்துவம் வழங்க எதிர்பார்த்துள்ளதால் அதற்காக இலங்கை தமது அதிகபட்ச ஒத்துழைப்பை இலங்கை வழங்குமெனவும் தூதுவர் சமிந்தா ஐ கொலொன்னே தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...