tamilni 259 scaled
செய்திகள்விளையாட்டு

சிஸ்கேவின் அடுத்த தலைவர் யார்! நிர்வாகம் எடுத்துள்ள முடிவு

Share

சிஸ்கேவின் அடுத்த தலைவர் யார்! நிர்வாகம் எடுத்துள்ள முடிவு

ஐபிஎல் 2024 ஆரம்பமாகவுள்ள நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் எதிர்கால திட்டம் பற்றி அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான காசி விஸ்வநாதன் பேசியுள்ளார்.

தோனியின் கடைசி சீசன் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அவருக்கு பின்னர் அணியின் தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை அணியை தோனியே வழிநடத்துவார் என்று காசி விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை சிஸ்கே அணியின் புதிய அணித்தலைவரை தெரிவு செய்ய அவசரப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளதுடன் சென்னை அணியின் பயிற்சியாளரும் தோனியும் சேர்ந்து தான் இதனை பற்றி முடிவு எடுக்க வேண்டும் என்று நிர்வாகிகள் தரப்பு விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அணித்தலைவர் உட்பட முதன்மையான இரு பொறுப்புகள் குறித்து நாம் விவாதிக்க தேவையில்லை, அதை தோனியும் பயிற்சியாளரும் முடிவு செய்யட்டும் அவர்கள் முடிவை தம்மிடம் தெரிவிக்கட்டும், அதை உங்களுக்கு தெரிவிப்பேன் என ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளதாக விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணி முன்பு ரவீந்திர ஜடேஜாவை அணித்தலைவராக நியமித்திருந்த நிலையில் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. எனவே மீண்டும் அணித்தலைவராக தோனியே களமிறங்கினார்.

ஐபிஎல் 2024 இம்மாதம் 22 ஆரம்பமாகவுள்ளதோடு அன்று சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.

Share

Recent Posts

தொடர்புடையது
25 67c591bd8956f
இலங்கைசெய்திகள்

கேபிள் கார் திட்டம்: தேவையற்ற தலையீடுகளைத் தடுக்க கம்பளை பிரதேச செயலாளருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் எழுத்தாணை கட்டளை!

இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்தின் நடவடிக்கைகளில் தேவையற்ற விதத்தில் தலையிடுவதையோ, இடையூறு செய்வதையோ, தடுக்கும்...

james watson 2
செய்திகள்உலகம்

டிஎன்ஏவின் இரட்டைச் சுருள் அமைப்பைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!

டிஎன்ஏவின் (DNA) அமைப்பைக் கண்டுபிடித்ததில் முக்கியப் பங்காற்றிய நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ்...

8b112170 d678 11ef 94cb 5f844ceb9e30.jpg
செய்திகள்உலகம்

காசாவில் பணயக் கைதியாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை: விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியப் பெண் பகீர் தகவல்!

காசாவில் பணயக் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தற்போது விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியப்...

1990535 20
செய்திகள்இலங்கை

தாயின் ஓரினச்சேர்க்கை நடத்தையால் சந்தேகம் – 6 மாதக் குழந்தை கொலையா? மறுபிரேதப் பரிசோதனைக்கு உத்தரவு!

ஓசூர் பகுதியில் ஆறு மாதக் குழந்தை ஒன்று தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத் திணறி இறந்ததாக முன்னர்...