PSX 20210902 161451
விளையாட்டுசெய்திகள்

பாராலிம்பிக் – இலங்கை வீரர்களுக்கு பண வெகுமதி!!

Share

பாராலிம்பிக் – இலங்கை வீரர்களுக்கு பண வெகுமதி!!

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் 2020 போட்டிகளில் பதக்கம் பெற்ற இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு பண வெகுமதிகளை வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் துலன் கொடித்துவக்கு ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெண்கலம் வென்றனர்.

அவர்களின் வெற்றியைத் தொடர்ந்து, விளையாட்டுத்துறை அமைச்சால் ஹேரத்துக்கு 50 மில்லியன் ரூபாவும், கொடித்துவக்குவுக்கு 20 மில்லியன் ரூபாவும் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் வேண்டுகோளின் பேரில், இந்த சிறப்பு அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டது என விளையாட்டுத்துறை அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சால் ஒதுக்கப்பட்ட பரிசுத் தொகை பின்வருமாறு:

தங்கம் – ரூ. 50 மில்லியன்.
வெண்கலம் – ரூ. 20 மில்லியன்.
4 ஆவது – 8 ஆவது இடம் – ரூ. 2.5 மில்லியன்
9 ஆவது -16 வது இடம் – ரூ. 1 மில்லியன் (x4)
உலக சாதனை – ரூ. 10 மில்லியன்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...