செய்திகள்விளையாட்டு

நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா

india 5
india
Share

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

ஜெய்ப்பூர் துடுப்பாட்ட மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் T 20 துடுப்பாட்ட போட்டியில் விளையாடின.

இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 164 ஓட்டங்களை எடுத்தது.

165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா துடுப்பெடுத்தாடியது.

அணித்தலைவர் ரோகித் மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ராகுல், 15 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .

ராகுல் மற்றும் ரோகித் 50 ஓட்டங்களுக்கு இணையட்டம் அமைத்தனர்.

பின்னர் சூரியகுமார் யாதவ், ரோகித் உடன் சேர்ந்து 59 ஓட்டங்களுக்கு இணையட்டம் அமைத்தார்.

அணித்தலைவர் ரோகித் 36 பந்துகளில் 48 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

சூரியகுமார், 40 பந்துகளில் 62 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

ஷ்ரேயஸ் ஐயர் 5 ஓட்டங்களிலும், வெங்கடேஷ் ஐயர் 4ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

கடைசி 4 பந்துகளில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

அக்சர் பட்டேல் மற்றும் பண்ட் களத்தில் இருந்தனர்.

கடைசி ஓவரின் நான்காவது பந்தில் பண்ட் நான்கு ஓட்டங்களை எடுக்க இந்தியா 5 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

#SPORTS

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...