rtjy 143 scaled
செய்திகள்விளையாட்டு

எதிர்வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் குறித்து முத்தையா முரளிதரன்

Share

எதிர்வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் குறித்து முத்தையா முரளிதரன்

எதிர்வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கக்கூடும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் நவம்பர் 19 ஆம் திகதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது.

இம்முறை உலகக்கிண்ணத் தொடரை இந்தியா நடத்தவுள்ளதுடன், போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கவுள்ளன.

இந்த நிலையில், உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் வெற்றி குறித்து முத்தையா முரளிதரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கே சாதகமாக இருக்கக்கூடும். ஏனெனில் அவர்கள் சிறந்த அணி. மேலும் சொந்த மைதானங்களில் சாதகமான சூழ்நிலை உள்ளது. அத்துடன் கோடிக்கணக்கான கிரிக்கெட் இரசிகர்களின் ஆதரவும் உள்ளதுடன், இவை இந்திய வீரர்களுக்கு ஊக்கமளிக்கும்.

இதற்கு அடுத்த படியாக அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தானும் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 6902bb859df27
இலங்கைசெய்திகள்

விசா விண்ணப்பதாரர்களுக்கு இந்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

இந்திய விசா மற்றும் தூதரக சேவைகள் தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் (High Commission of...

25 690253c5e39ee
அரசியல்இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் ஒருவருக்குக் கொலை மிரட்டல்! – போலீசார் விசாரணை தீவிரம்!

ஹோமாகம பிரதேச சபையின் தவிசாளரும் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினருமான கசுன் ரத்நாயக்கவுக்கு “ஹந்தயா”...

25 69024001ac0cb
இலங்கைசெய்திகள்

கைவிலங்குடன் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய முக்கிய குற்றவாளி – போலீசார் தீவிர தேடுதல்!

அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் இருந்தவேளை திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபர் கைவிலங்குகளுடன்...

25 69024640d7629
உலகம்செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலின் கோரம்: காஸாவில் 46 சிறுவர்கள் உட்பட 104 உயிர்கள் பலி. 

போர்நிறுத்ததை மீறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட...