tamilni 164 scaled
செய்திகள்விளையாட்டு

ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா

Share

ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 228 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. இந்த போட்டியில் இந்திய அணி 147 ஓட்டங்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இதனால் அடுத்தநாள் ரிசர்வ் டேவில் , விடப்பட்ட இடத்திலிருந்து போட்டி தொடங்கியது. இதில் விராட் கோலியும், கே எல் ராகுலும் தங்களுடைய வாழ்நாளில் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை விளையாடினார்கள்.

குறிப்பாக காயத்திலிருந்து திரும்பி வந்துள்ள கே.எல். ராகுல் 106 பந்துகளில் 111 ஓட்டங்கள் விளாசினார். மறுமுனையில் இருந்த விராட் கோலி 94 பந்துகளில் 122 ஓட்டங்கள் குவித்தார்.

இதில் ஒன்பது பவுண்டரிகளும் மூன்று இமாலய சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 47வது சதம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 13,000 ஓட்டங்கள் என பல்வேறு சாதனைகளை விராட் கோலி படைத்துள்ளார்.

இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 356 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை எடுத்தது. இதனை தொடர்ந்து 357 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி தங்களது இன்னிங்சை தொடங்கியது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பாகிஸ்தானை காட்டிலும் இன்று சிறப்பாக செயல்பட்டது. இந்திய வேகப்பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் இமாமுல் ஹக் 9 ஓட்டங்களிலும் பாபர் அசாம் 10 ஓட்டங்களிலும் முகமது ரிஸ்வான் இரண்டு ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதன் மூலம் பாகிஸ்தான் அணி 128 ஓட்டங்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் 32 ஓவரில் பாகிஸ்தான் அணி 128 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை தழுவியது. இந்நிலையில் சிறப்பாக பந்து விஷய குல்திப் யாதவ் 8 ஓவர்கள் வீசி 25 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...