aq scaled
செய்திகள்விளையாட்டு

சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று இந்திய இளம் பெண் சாதனை!

Share

பெருவில் இடம்பெற்று வரும் ஜூனியர் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில், 14 வயதுடைய இளம் இந்தியப் பெண், தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பெரு நாட்டின் தலைநகரான லிமாவில், ஜூனியர் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டி இடம்பெற்று வருகிறது.இந்தப் போட்டித் தொடரில், இந்தியா 8 தங்கப் பதக்கம் உள்ளடங்கலாக 17 பதக்கங்களுடன் முன்னிலையில் இருந்து வருகிறது. அமெரிக்கா இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், ஜூனியர் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில், நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான 25 மீற்றர் பிஸ்டல் பிரிவில், 14 வயதுடைய இந்தியாவின் இளம் வீராங்கனை ஒருவர் தங்கப் பதக்கம் பெற்றுக்கொண்டுள்ளார்.

நம்யா கபூர் என்ற இளம் பெண் வீராங்கனையே இவ்வாறு தங்கப் பதக்கத்தை வெற்றிகொண்டு இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். இதன்மூலம் மிக இளம் வயதில் சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் என்ற பெருமையை நம்யா கபூர் பெற்றுள்ளார்.

இதேவேளை,  இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர், குறித்த போட்டியில் வெண்கல பதக்கத்தை வெற்றி கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...