Novak Djokovic 1
விளையாட்டுசெய்திகள்

ஜோகோவிச்சின் விசா விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Share

அவுஸ்திரேலிய அதிகாரிகள் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரத்து செய்திருந்த நிலையில், ஜோகோவிச்சை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவிற்கு டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் சென்றிருந்த நிலையில்,

கொவிட் தடுப்பூசி ஏற்றுகை பற்றிய விபரங்களை வழங்கத் தவறிய காரணத்தினால் அவர் ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டார்.

இதனையடுத்து தனது விசா இரத்து செய்யப்பட்டமையை எதிர்த்து ஜோகோவிச் அவுஸ்திரேலிய நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, ஜோகோவிச் ஹோட்டல் தடுப்பு காவலிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் எனவும், விசாவை இரத்து செய்த அரசாங்கத்தின் தீர்மானம் பிழையானது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், அமைச்சு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசா இரத்து செய்யப்பட்டால் அவர் 03 ஆண்டுகளுக்கு அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்பட மட்டார் என நீதிபதி அந்தனி கெல்லி தெரிவித்துள்ளார்.

இதன்படி, அமைச்சரவை அதிகாரம் பயன்படுத்தப்பட்டு விசா மீளவும் இரத்து செய்யப்பட்டால், டென்னிஸ் வீரரான ஜோகோவிச் அவுஸ்திரேலியாவிற்குள் 03 வருடங்கள் நுழைவதற்கு முடியாத நிலை உருவாகும் எனவும் கூறப்படுகிறது.

#SportsNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...