Novak Djokovic 1
விளையாட்டுசெய்திகள்

ஜோகோவிச்சின் விசா விவகாரம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Share

அவுஸ்திரேலிய அதிகாரிகள் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரத்து செய்திருந்த நிலையில், ஜோகோவிச்சை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலியாவிற்கு டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் சென்றிருந்த நிலையில்,

கொவிட் தடுப்பூசி ஏற்றுகை பற்றிய விபரங்களை வழங்கத் தவறிய காரணத்தினால் அவர் ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டார்.

இதனையடுத்து தனது விசா இரத்து செய்யப்பட்டமையை எதிர்த்து ஜோகோவிச் அவுஸ்திரேலிய நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, ஜோகோவிச் ஹோட்டல் தடுப்பு காவலிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் எனவும், விசாவை இரத்து செய்த அரசாங்கத்தின் தீர்மானம் பிழையானது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், அமைச்சு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசா இரத்து செய்யப்பட்டால் அவர் 03 ஆண்டுகளுக்கு அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்பட மட்டார் என நீதிபதி அந்தனி கெல்லி தெரிவித்துள்ளார்.

இதன்படி, அமைச்சரவை அதிகாரம் பயன்படுத்தப்பட்டு விசா மீளவும் இரத்து செய்யப்பட்டால், டென்னிஸ் வீரரான ஜோகோவிச் அவுஸ்திரேலியாவிற்குள் 03 வருடங்கள் நுழைவதற்கு முடியாத நிலை உருவாகும் எனவும் கூறப்படுகிறது.

#SportsNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...