Sajith Premadasa.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி கனவில் சிலர்!! – சஜித் நெத்தியடி

Share

” ஜனாதிபதியாகும் கனவில் சிலர் தற்போதே அதற்கான ஆடைகளை தைத்து வைத்துக்கொண்டுள்ளனர்.

அத்தகைய ‘காட்போட்’ ஜனாதிபதிகளுக்கு நான் சவாலொன்றை விடுக்கின்றேன்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

43ஆம் படையணி எனும் அரசியல் இயக்கத்தின் மாநாட்டை சம்பிக்க ரணவக்க வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள பின்புலத்திலேயே சஜித்திடமிருந்து இவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பில் சஜித் மேலும் கூறியவை வருமாறு,

” இந்த அரசு விவசாயத்தை முழுமையாக அழித்துள்ளது. எமது ஆட்சியில் விவசாயிகளுக்கு மாநிய விலையில் உரம் வழங்கப்படும். நாம் பலவீனமானதொரு அரசை உருவாக்கமாட்டோம். குழப்பங்களுக்கு வழிவகுக்கும் கூட்டணிகளுக்கும் இடமில்லை. நிச்சயம் அது மக்களுக்கான அரசாக அமையும்.

சிலர் ஜனாதிபதி கனவில் வாழ்கின்றனர். தற்போதே ஆடைகளையும் தைத்துக்கொண்டுள்ளனர். அத்தகைய காட்போட் ஜனாதிபதிகளுக்கு, என்னைபோல மக்களுக்கு சேவை செய்து காட்டுமாறு சவால் விடுக்கின்றேன்.” – என்றார் சஜித்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...