Sudanese army has shot dead
செய்திகள்உலகம்

துப்பாக்கியால் 15பேரை சுட்டுக்கொன்ற படையினர் !

Share

துப்பாக்கியால் 15பேரை சூடான் இராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது.

சூடானில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 போ் சாவடைந்துள்ளனர் .

இராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் போராட்டத்தில், ஒரே நாளில் இத்தனை அதிகம் போ் சாவடைந்தது இதுவே முதல்முறையாகும்.

சூடானில் இராணுவ ஆட்சியை எதிா்த்து தலைநகா் காா்ட்டூம், சூடான் துறைமுகம், கஸாலா, டோங்கோலா, வாட் மடானி, ஜெனினா உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கானோா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும் 15 போ் சாவடைந்ததாக மருத்துவா்கள் சங்கம் தெரிவித்தது.

சூடானை கடந்த 1989-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு வந்த ஒமா் அல்-பஷீா், இராணுவத்தால் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா்.

அதன்பிறகு இராணுவம் மற்றும் அரசியல் தலைவா்களைப் பிரதிநிதிகளாக கொண்ட இறையாண்மை கவுன்சில் உருவாக்கப்பட்டு, இடைக்கால அரசும் அமைக்கப்பட்டது.

அந்த அரசின் பிரதமராக அப்தல்லா ஹாம்டோக் பொறுப்பேற்றாா்.

இந்த நிலையில், அந்த அரசை இராணுவம் கடந்த மாதம் 25-ஆம் தேதி கலைத்தது. மேலும், நாட்டில் அவசரநிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தற்போது சூடானில் பதற்றநிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...