யாழ் பண்ணை பகுதியில் யாழ்ப்பாண பொலிஸாரால் சிரமதான பணி முன்னெடுப்பட்டுள்ளது
யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் நெறிப்படுத்தலில் யாழ் பொலிஸாரால் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது
பண்ணை கடற்கரை பகுதியில் குறித்த சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது. குறித்த சிரமதானப் பணியில் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் சார்பான பொலிஸார் சிரமதானப் பணியை முன்னெடுத்திருந்தனர்.
#SriLankaNews
Leave a comment