yohani 720x375 1
செய்திகள்இலங்கை

இந்திய இசை நிகழ்வில் பாடுகிறார் இளம் பாடகி யொஹானி!

Share

மெனிக்கே மகே ஹித்தே பாடலின் மூலமாக உலகளவில் பிரபல்யமான இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வா இந்தியாவில் நடைபெறவுள்ள நேரடி இசை நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இந்த இசை நிகழ்ச்சிகள் எதிர்வரும் 30ம் திகதி மற்றும் ஒக்டோபர் 03 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்ச்சிகள் எதிர்வரும் 30ம் திகதி இந்தியாவின் புதுடெல்லிக்கு அருகிலுள்ள ஹரியானா குருகிராம் நகரிலுள்ள ‘ஸ்டூடியோ எக்ஸ்ஓ’ அரங்கத்திலும், அக்டோபர் 3ம் திகதி ஹைதராபாத் நகரிலுள்ள ‘ ஹார்ட் கப் கொஃபி’ அரங்கிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யொஹானி டி சில்வா இந்தியாவில் பங்குபற்றவுள்ள இந்த இசை நிகழ்ச்சிக்கு ‘ Supermoon #NowTrending’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

யொஹானியின் இசை நிகழ்ச்சி இந்தியாவில் நடைபெறவுள்ளமை இதுவே முதல் தடவையாகும். இது குறித்து யொஹானி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது,

‘இந்தியாவில் பாட வேண்டுமென நான் எப்போதும் விரும்பியிருந்தேன். இறுதியில் அது நடப்பதை என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு கிடைத்த அதிஸ்டம்’ என கூறியுள்ளார் .

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...