268555878 444984940488135 6310740826354725216 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையிலும் சிங்கம் சூர்யா – குவியும் பாராட்டுக்கள்!!!

Share

கொழும்பு புறக்கோட்டை வீதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய நபரை பொலிஸ் அதிகாரி ஒருவர் சிங்கம் பட சூர்யா பாணியில் கைது செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புறக்கோட்டை பிரதான வீதியில் வாகனங்களை நிறுத்த முடியாத இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தொடர்பில் உரிய பொலிஸ் உத்தியோகத்தர் அவதானித்துள்ளார் .

இதுதொடர்பாக அங்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அது யாருடையது என தகவல் எதுவும் கிடைக்கவில்லை.எனினும், சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் வந்து அதனை இயக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

அவ்வேளையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் வந்து இங்கு மோட்டார் சைக்கிள் நிறுத்திய குற்றச் செயல் தொடர்பில் விசாரணை செய்ய முற்படுகையில் மோட்டார் சைக்கிளை இயக்கியவர் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர் மோட்டார் சைக்கிளை எட்டிப்பிடித்துள்ளார் உரிமையாளர் மோட்டார் சைக்கிளை செலுத்தியதுடன் பிடித்த பொலிஸ் உத்தியோகத்தரை வீதியில் இழுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் சுமார் 70 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதி சரிந்துள்ளது.

இதனையடுத்து பிரதான வீதியில் மக்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவரை தப்பிச் செல்ல விடாமல் தடுத்து வைத்திருந்ததுடன் அந்த பொலிஸ் உத்தியோகத்தரை தூக்கி உதவி செய்தனர்.

இச்சம்பவத்தில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...