Mullai
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லையில் கையெழுத்து வேட்டை!

Share

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளையும், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளையும் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண கடற்றொழிலாளர் இணையமும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் இணைந்து முன்னெடுத்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் வருகை மற்றும், சட்டவிரோத கடற்றொழில்செயற்பாடுகளுக்கு எதிரான கையெழுத்துவேட்டை முல்லைத்தீவில் நேற்று (03) இடம்பெற்றது.

இதில் பங்கேற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அவர் மேலும் கூறுகையில்,

வடமாகாண கடற்றொழிலாளர் இணையமும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் சேர்ந்து தடைசெய்யப்பட்ட சட்டவிரோதமான கடற்றொழில்களுக்கு எதிராக இந்த கையெழுத்து வேட்டையை நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

இதிலே ஒரு இலட்சம் கையெழுத்துகளுக்குமேல் வாங்கி, தடைசெய்யப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அடக்கவேண்டும் என்ற நோக்கோடு உச்சநீதிமன்னில் வழக்கொன்றைத் தொடர்வதற்காக இந்த கையெழுத்து வேட்டை இடம்பெறுகின்றது.

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் எங்களுடைய அப்பாவி மீனவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். இம்முறைக்குரிய இறால் பருவகாலம் அண்மித்துள்ள நிலையில், இந்திய இழவைப்படகுகள் மற்றும், தென்னிலங்கை இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளால் எமது மீனவர்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

எமது மீனவர்களின் இந்தக் கோரிக்கை வலுப்பெறவேண்டும் எனத் தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...