Mullai
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லையில் கையெழுத்து வேட்டை!

Share

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளையும், சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளையும் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண கடற்றொழிலாளர் இணையமும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் இணைந்து முன்னெடுத்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் வருகை மற்றும், சட்டவிரோத கடற்றொழில்செயற்பாடுகளுக்கு எதிரான கையெழுத்துவேட்டை முல்லைத்தீவில் நேற்று (03) இடம்பெற்றது.

இதில் பங்கேற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அவர் மேலும் கூறுகையில்,

வடமாகாண கடற்றொழிலாளர் இணையமும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் சேர்ந்து தடைசெய்யப்பட்ட சட்டவிரோதமான கடற்றொழில்களுக்கு எதிராக இந்த கையெழுத்து வேட்டையை நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

இதிலே ஒரு இலட்சம் கையெழுத்துகளுக்குமேல் வாங்கி, தடைசெய்யப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அடக்கவேண்டும் என்ற நோக்கோடு உச்சநீதிமன்னில் வழக்கொன்றைத் தொடர்வதற்காக இந்த கையெழுத்து வேட்டை இடம்பெறுகின்றது.

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் எங்களுடைய அப்பாவி மீனவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். இம்முறைக்குரிய இறால் பருவகாலம் அண்மித்துள்ள நிலையில், இந்திய இழவைப்படகுகள் மற்றும், தென்னிலங்கை இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளால் எமது மீனவர்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

எமது மீனவர்களின் இந்தக் கோரிக்கை வலுப்பெறவேண்டும் எனத் தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...