image 43aa3a17db
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்: 43% வாகன ஓட்டுநர்கள் ‘ஐஸ்’ போதைப்பொருளுக்கு அடிமை!

Share

கொழும்பு மாநகரப் பகுதியில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்களில் பெரும்பாலானோர் ‘ஐஸ்’ (Crystal Meth) மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளமை ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆரச்சி இந்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்களை வெளியிட்டார். போக்குவரத்து விதிகளுக்கு முரணாக வாகனம் செலுத்துபவர்களில் 43 சதவீதமானவர்கள் ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்கள் என அடையாளர் காணப்பட்டுள்ளனர்.

ஏறத்தாழ 25 சதவீதமான வாகன ஓட்டுநர்கள் கஞ்சா போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதி மீறல்கள் மற்றும் வீதி விபத்துக்களுக்கு இந்த போதைப்பொருள் பாவனையே பிரதான காரணியாக அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, கொழும்பு போன்ற நெரிசலான பகுதிகளில் இவ்வாறான ஓட்டுநர்களால் பொதுமக்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதனைக் கட்டுப்படுத்த வீதிகளில் எழுமாறான போதைப்பொருள் சோதனைகளை (Random Drug Testing) அதிகரிப்பதுடன், கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

 

 

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...