image 7582b14241 696x391 1
செய்திகள்இலங்கை

கணக்காய்வாளர் நாயகம் இன்றி நாடு அராஜக நிலையை நோக்கிச் செல்கிறது – தயாசிறி ஜயசேகர கடும் எச்சரிக்கை!

Share

 

நாட்டில் ஒரு மாத காலமாக கணக்காய்வாளர் நாயகம் (Auditor General) நியமிக்கப்படாததால், நிதி ஒழுக்கம் சீர்குலைந்து நாடு பாரதூரமான அராஜக நிலையை நோக்கிச் செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (08) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பில் அவர் கடந்த ஒரு வருடமாக பதில் கணக்காய்வாளர் நாயகம் ஒருவரே கடமையாற்றி வந்தார். ஆனால், கடந்த ஒரு மாத காலமாக பதில் அதிகாரி கூட இன்றி கணக்காய்வு திணைக்களம் முடங்கியுள்ளது.

அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருந்த தர்மப்பிரிய கம்மன்பிலவின் பெயரைப் பரிந்துரைக்க ஜனாதிபதி தயக்கம் காட்டி வருகிறார். மாறாக, தகுதி குறைந்தவர்களின் பெயர்களை ஜனாதிபதி அனுப்பி வைத்ததால் அரசியலமைப்பு பேரவை அவற்றை நிராகரித்துள்ளது.

கணக்காய்வாளர் நாயகம் இல்லாததால், பொதுக் கணக்குக் குழு (COPA) மற்றும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (COPE) ஆகியவற்றின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

முறையான கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கத் தவறியமை மற்றும் அதனால் ஏற்படும் நிதிச் சீர்கேடுகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி ஆகியவற்றிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

நாட்டின் நிதி ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்குத் தகுதியான ஒருவரை உடனடியாக நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

 

 

 

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...