image 7582b14241 696x391 1
செய்திகள்இலங்கை

கணக்காய்வாளர் நாயகம் இன்றி நாடு அராஜக நிலையை நோக்கிச் செல்கிறது – தயாசிறி ஜயசேகர கடும் எச்சரிக்கை!

Share

 

நாட்டில் ஒரு மாத காலமாக கணக்காய்வாளர் நாயகம் (Auditor General) நியமிக்கப்படாததால், நிதி ஒழுக்கம் சீர்குலைந்து நாடு பாரதூரமான அராஜக நிலையை நோக்கிச் செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (08) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பில் அவர் கடந்த ஒரு வருடமாக பதில் கணக்காய்வாளர் நாயகம் ஒருவரே கடமையாற்றி வந்தார். ஆனால், கடந்த ஒரு மாத காலமாக பதில் அதிகாரி கூட இன்றி கணக்காய்வு திணைக்களம் முடங்கியுள்ளது.

அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருந்த தர்மப்பிரிய கம்மன்பிலவின் பெயரைப் பரிந்துரைக்க ஜனாதிபதி தயக்கம் காட்டி வருகிறார். மாறாக, தகுதி குறைந்தவர்களின் பெயர்களை ஜனாதிபதி அனுப்பி வைத்ததால் அரசியலமைப்பு பேரவை அவற்றை நிராகரித்துள்ளது.

கணக்காய்வாளர் நாயகம் இல்லாததால், பொதுக் கணக்குக் குழு (COPA) மற்றும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (COPE) ஆகியவற்றின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

முறையான கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்கத் தவறியமை மற்றும் அதனால் ஏற்படும் நிதிச் சீர்கேடுகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி ஆகியவற்றிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்க எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

நாட்டின் நிதி ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்குத் தகுதியான ஒருவரை உடனடியாக நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

 

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...