Coconut Robbery
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பறித்ததோ 03 தேங்காய்: பிணையோ 2 இலட்சம் ரூபாய்

Share

மூன்று தேங்காய்களை பறித்த மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் 2 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

காலி, வகுனகொட பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் மூன்று தேங்காய்களைப் பறித்தமையால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் கைதான மூவரும் காலி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு பிரதம நீதவான் ஹர்ஷன கெகுனவெல உத்தரவிட்டுள்ளார்.

சிறுமி ஒருவரும் காலியைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு தேங்காயைப் பறித்துள்ளனர். அதிகமாக திருட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவதால் தென்னந்தோப்பு உரிமையாளர் தனது காணியில் சிசிரிவி கெமராவை பொருத்தியுள்ளார்.

சிசிரிவி காட்சிகளைக் கொண்டே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...