Dayasiri Jayasekara 1
செய்திகள்அரசியல்இலங்கை

நாணய நிதியத்தை நாடுங்கள்! – அரசுக்கு ஆலோசனை

Share

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசு பேச்சு நடத்த வேண்டும் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆலோசனை வழங்கியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியவை வருமாறு,

” தற்போதைய சூழ்நிலையில் ஓர் மாற்றுத் தேர்வாக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. ஏனெனில் இந்தியா, சீனா மற்றும் ஜப்பான ஆகிய நாடுகளும் உதவிகளை குறைத்துள்ளன.

சர்வதேச நாணய நிதியம் சில நிபந்தனைகளை முன்வைக்கும். எனவே, பேச்சு நடத்தி, எதிர்கால நடவடிக்கைகைள முன்னெடுக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

நாட்டை மீட்பதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்.” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...