WhatsApp Image 2021 12 21 at 12.01.27 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சடலமாக மீட்கப்பட்ட பாடசாலை மாணவி!!

Share

பதுளையில் நேற்று முன்தினம் 19 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த உயர்தர வகுப்பு மாணவியொருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 12 இல் கல்வி பயிலும் லோகேஸ்வரன் லோஜினி என்ற மாணவியே  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பதுளை நகரிலுள்ள மேலதிக வகுப்புக்கு கடந்த 19 ஆம் திகதி சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பில் குறித்த மாணவியின் தாயால் கஹட்டருப்ப பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

நேற்று அவரின் பாடசாலை புத்தகப்பை மற்றும் பாதணிகள் ஆகியன பதுளை கோபோ பகுதியில் நீர் நிலையொன்றின் அருகில் ( தெப்பக்குளம்) இருந்து  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுழியோடிகளின் உதவியுடன் தேடுதல் இடம்பெற்று,  இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

articles2F8wuyhpUNfptSJfoLRtVn
உலகம்செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையை மீளத் தொடங்க அமெரிக்காவை வற்புறுத்துமாறு சவுதியிடம் ஈரான் கோரிக்கை!

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியில் தடைபட்டிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க...

25 691962050dadd
செய்திகள்உலகம்

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகம்: MI5 எச்சரிக்கைக்கு மத்தியிலும் பிரதமர் ஒப்புதல்!

லண்டனில் 20,000 சதுர மீற்றர் பரப்பளவில் புதிய சீனத் தூதரகத்தை அமைக்கும் திட்டத்திற்கு, இங்கிலாந்துப் பிரதமர்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...