WhatsApp Image 2021 12 21 at 12.01.27 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சடலமாக மீட்கப்பட்ட பாடசாலை மாணவி!!

Share

பதுளையில் நேற்று முன்தினம் 19 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த உயர்தர வகுப்பு மாணவியொருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 12 இல் கல்வி பயிலும் லோகேஸ்வரன் லோஜினி என்ற மாணவியே  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பதுளை நகரிலுள்ள மேலதிக வகுப்புக்கு கடந்த 19 ஆம் திகதி சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பில் குறித்த மாணவியின் தாயால் கஹட்டருப்ப பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

நேற்று அவரின் பாடசாலை புத்தகப்பை மற்றும் பாதணிகள் ஆகியன பதுளை கோபோ பகுதியில் நீர் நிலையொன்றின் அருகில் ( தெப்பக்குளம்) இருந்து  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுழியோடிகளின் உதவியுடன் தேடுதல் இடம்பெற்று,  இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...