school children
செய்திகள்இலங்கை

பாதுகாப்பற்ற நிலையில் பாடசாலை மாணவர்கள்!

Share

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் தொடர்ச்சியாக கொரோனா தொற்றுக்குள்ளாகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆகவே, பாடசாலை சமூகத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகின்றார்கள் எனவும், இதனால் எதிர்காலத்தில் ஒட்டுமொத்த பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் வேகமாக பாதிக்கப்பட கூடிய சாத்தியபாடுகள் அதிகமாக காணப்படுவதாக ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சருக்கு தெரிவித்துள்ளனர்.

மேலும், பாடசாலைகளில் சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றபடாத நிலையே இதற்கான காரணமாகும் என சுட்டிக்காட்டியிருந்தனர்.

ஏனெனில், பாடசாலைகளில் கொரோனா தொற்று நீக்கிகளை வாங்குவதற்காக முறையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படவில்லை அத்தோடு தமது சொந்த பணத்தில் கொரோனா பரிசோதனை செய்கின்ற நிலையில் ஆசிரிய சமூகம் காணப்படுகின்றது.

ஆகவே பாடசாலைகளில் கொரோனா பாதுகாப்பு குறித்த சுற்றிக்கை வெளியிடப்பட வேண்டும் என ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...