பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை: உயர்தரப் பரீட்சை காரணமாக நவம்பர் 7 உடன் முதற்கட்டம் நிறைவு!

25 690c595a669be

அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2025ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (நவ 07) முடிவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளதையடுத்து, நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 08, 2025 திங்கட்கிழமை மீண்டும் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 24, 2025 திங்கட்கிழமை தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, டிசம்பர் 8ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் மீள ஆரம்பமாகும்.

Exit mobile version