ezgif.com gif maker
செய்திகள்விளையாட்டு

இந்தியா சுழலில் சிக்கி சிதறிய நியுஸிலாந்து!!!

Share

நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 372 ஓட்டங்களினால் மிகச் சிறப்பான வெற்றியொன்றைப் பதிவு செய்ததன் மூலம் இந்திய அணி தொடரை 1க்கு 0 என்று வெற்றி கொண்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.

போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் 540 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

பந்துவீச்சில் இந்திய அணியின் சுழல் ஜாம்பவான் அஸ்வின், ஜெயந் ஜாதவ் தலா நான்கு இலக்குகளையும் அக்சர் பட்டேல் ஒரு இலக்கையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக மயாங் அகர்வால் தெரிவு செய்யப்பட்டதுடன், தொடர் நாயகனாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவு செய்யப்பட்டார்.

முன்னதாக இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், நியூஸிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரையும் 3 க்கு 0 எனும் அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியிருந்தது.

இதேவேளை டெஸ்ட் அரங்கில் அதிக இலக்குகளை கைப்பற்றிய இந்தியர்கள் வரிசையில் அஸ்வின் 300 இலக்குகளுடன் இரண்டாமிடத்திற்கு முன்னேறியதுடன் இந்தியாவில் அதிக ஓட்டங்களில் வெல்லப்பட்ட டெஸ்ட் போட்டியாகவும் இது பதிவானது.

#Sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 18
செய்திகள்இலங்கை

சீரற்ற வானிலை: தடைப்பட்ட நீர் விநியோகம் இரண்டு நாட்களுக்குள் சீரமைக்கப்படும் – தேசிய நீர் வழங்கல் சபை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாகப் பல மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள நீர்...

images 17
செய்திகள்இலங்கை

வெள்ளத்தில் அகப்பட்டு நீர்கொழும்பில் இருவர் உயிரிழப்பு

நாட்டைத் தாக்கிய பாரிய பேரழிவின் காரணமாக நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்....

25 692d73f8ae775
செய்திகள்இலங்கை

முத்தயன்கட்டு வெள்ளத்தில் சிக்கிய ஏழு விவசாயிகளும் சிறுவனும் பத்திரமாக மீட்பு: கடற்றொழிலாளர்கள் குழு மனிதாபிமான உதவி!

முல்லைத்தீவு முத்தயன்கட்டு நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக விவசாய நிலங்களில்...

images 16
செய்திகள்இலங்கை

சாரதி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கச் சலுகை: டிசம்பர் 25 வரை காலாவதியான உரிமங்களுடன் வாகனம் ஓட்டச் சட்டத் தடைகள் இல்லை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்த நிலைமைகள் காரணமாக, சாரதி அனுமதிப் பத்திரங்களைப்...