sajith premadasa SL flag 1 0
செய்திகள்உலகம்

சூறாவளி ஓய்ந்த பின்னரே அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன: சர்வதேச ஆய்வை மேற்கோள் காட்டி சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

Share

சூறாவளி வீசும் நேரத்தை விட, அது ஓய்ந்த பின்னரான காலப்பகுதியிலேயே அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்படுவதாக அண்மைக்கால ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி இதனைத் தெரிவித்தார்.

மொனாஷ் பல்கலைக்கழகமானது 2000 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஒன்பது நாடுகளில் இடம்பெற்ற சுமார் 15 மில்லியன் மரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விரிவான ஆய்வை முன்னெடுத்துள்ளது.

சூறாவளிக் காற்றின் நேரடித் தாக்கத்தினால் பலியாகும் நபர்களின் எண்ணிக்கையை விட, சூறாவளி ஓய்ந்த பின்னரான காலப்பகுதியில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சூறாவளிக்குப் பின்னர் ஏற்படும் தொற்று நோய்கள், போதிய மருத்துவ வசதியின்மை, வாழ்வாதாரப் பாதிப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு சீர்குலைவு போன்ற காரணிகளே இவ்வாறான அதிகப்படியான உயிரிழப்புகளுக்கு வழிவகுப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

“இந்த ஆய்வு முடிவுகளை நாம் பாடமாகக்கொள்ள வேண்டும். சூறாவளி வீசும் போது மாத்திரமன்றி, அது ஓய்ந்த பின்னரும் மக்களின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது வலியுறுத்தினார்.

 

 

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...