sajith
செய்திகள்அரசியல்இலங்கை

கோட்டா அரசின் நிலை இனி அந்தோகதிதான்! – சஜித் சுட்டிக்காட்டு

Share

அரச கூட்டுக்குள் உட்கட்சி மோதலைக்கூடச் சமாளிக்க முடியாமல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திண்டாடுகின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இந்நிலையில், நாடு இன்று பொருளாதார ரீதியில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை ஜனாதிபதி எப்படித் தீர்க்கப்போகின்றார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அரசில் அங்கத்துவம் வகித்துக்கொண்டு கூட்டுப் பொறுப்பை மீறும் வகையில் செயற்பட்டனர் எனக் கூறி விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகிய இருவரும் ஜனாதிபதியால் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டது. இந்த அரசை அரசுக்குள் இருப்பவர்களே வெறுக்கத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடாகவே விமல், கம்மன்பிலவின் அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியால் பறிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அனுமதியின்றி இருவரும் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதான் வேடிக்கையாக இருக்கின்றது.

எனவே, அரசுக்குள் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.

அரசின் நிலை இனி அந்தோகதிதான். மக்கள் அனைவரும் அரசுக்கு எதிரான போராட்டங்களை மென்மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.

நாட்டை நேசிக்கும் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஆட்சி விரைவில் மலர ஒத்துழைக்க வேண்டும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...