asianet news 2024 02 14t170211
இந்தியாசெய்திகள்

சைதை துரைசாமி மகன் மறைவு.., நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று ஆறுதல்

Share

சைதை துரைசாமி மகன் மறைவு.., நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று ஆறுதல்

சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி மறைவையொட்டி, அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

சென்னை முன்னாள் மேயரும், அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகருமான சைதை துரைசாமியின் மகன், இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற போது அவர் பயணித்த கார் கடந்த வாரம் சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து மீட்கப்பட்டார். அவரது நண்பர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 8 நாட்களுக்கு பிறகு வெற்றி துரைசாமியின் உடல் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, நேற்று விமானம் மூலம் வெற்றி துரைசாமியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பின்பு, நேற்று (பிப் -13) மாலை இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

வெற்றி துரைசாமி மறைவுக்கு சைதை துரைசாமியை நேரில் சந்தித்து பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சைதை துரைசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...