யாழ்ப்பாணம், எழுவைதீவு பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வீரபத்திரர் ஆலயத்தில் எழுந்தருளியிருந்த இரண்டு பெறுமதிமிக்க ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி ஆகிய இரு எழுந்தருளிச் சிலைகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளன. கடந்த வியாழக்கிழமை அதிகாலை வேளையில் இனந்தெரியாத நபர்கள் ஆலயத்திற்குள் புகுந்து இத்திருட்டை அரங்கேற்றியுள்ளனர்.
களவாடப்பட்ட இவ்விரு ஐம்பொன் சிலைகளின் சந்தைப் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
முறைப்பாட்டையடுத்து, ஊர்காவற்றுறை பொலிஸார் எழுவைதீவிற்கு நேரில் சென்று ஆலயப் பகுதியில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கைரேகை அடையாளங்கள் மற்றும் தடயங்களைச் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் துணிகரத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. எனினும், சிலைகளைக் மீட்கவும் குற்றவாளிகளைக் கண்டறியவும் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.